.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Wednesday, December 29, 2004

எரிகிற வீட்டில் பிடுங்கும் நாய்கள்.

தினமலரில் இந்த செய்தியை படித்தேன். அவர்களுடைய ஆருடம் பலித்து விட்டதாம். சந்தோசப்படுகிறார்கள். அரசியல்வாதிகளைவிட கீழ்த்தரமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்.


3 Comments:

At 1:18 am, Blogger சுந்தரவடிவேல் said...

அதுவும் ஆகஸ்ட் மாத மாத ராசிபலனில் வந்த ஒரு பொதுப்படையான மட ஆரூடத்தைக் காட்டி இப்படிப் பேசுவது...யாரோ ஒரு கேடு கெட்ட நிருபர் எழுதியிருக்கிறாரா அல்லது தினமலர் தன்னை ஒரு கேடு கெட்ட பத்திரிகை என்று சொல்லிக் கொள்கிறதா?

 
At 4:29 am, Blogger ROSAVASANTH said...

இது குறித்தும் மற்ற க்ளோன்கள் குறித்தும் வெங்கட்டின் பதிவில் எழுதியவை.

நான் ஜாபர் அலி என்னும் க்ளோனை வன்மையாக கண்டிக்கிறேன். கர்தரை முன் வைத்து இதே போல் எதையும் சொல்லும் மற்ற க்ளோன்களையும் கண்டிக்கிறேன். "பெரியவாள உள்ள போட்டதுனாலத்தான் இப்படில்லாம் நடக்கிறது" என்று பரப்ப விரும்பும் நயவஞ்சகர்களை இதைவிட அதிகமாக கண்டிக்கிறேன்.

ஆனால் தினமலர் மேலே சொன்ன கேஸ்களுடன் சேர்த்தியல்ல, அந்த அளவிற்கு வன்மையாய் கண்டிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் ஜாபர் அலியும், பெரியாவாளை பற்றி பரப்பும் கேஸ்களும், மக்களின்/ அரசின் செய்கைக்கான தண்டனையாக இதை (வக்ரத்துடன்) சொல்கிறது. தினமலர் சொல்வது ஜோசியத்தை முன்வைத்த வெறும் மூடநம்பிக்கை.

 
At 11:43 am, Blogger kirukan said...

//"பெரியவாள உள்ள போட்டதுனாலத்தான் இப்படில்லாம் நடக்கிறது" என்று பரப்ப விரும்பும் நயவஞ்சகர்களை இதைவிட அதிகமாக கண்டிக்கிறேன்.//

நேற்றைய தினமலரில் இப்படி ஒரு வதந்தி உலவுவதாக அவர்களே வதந்தி கிளப்பியிருந்தார்கள். நீங்கள் கவனிக்கவில்லை போலும். அதுவும் முதல் பக்க செய்தியில்.

 

Post a Comment

<< Home