சங்கராச்சாரியாருக்கு சில கேள்விகள்
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டாலும் செய்யப்பட்டார், ஏதோ உலக இந்துக்களுக்கெல்லாம் அவமானம் உண்டானது போல செய்திவரத் தொடங்கிவிட்டது. இதையெல்லாம் செய்பவர்கள் யாரென்று தமிழர்கள் நன்கறிவர். காலங்காலமாக அதிகாரவர்கத்தினருக்கு அடிவருடியவர்கள். கடவுளை தங்களுடைய தனிச்சொத்தாக்கியவர்கள். பூசைக்கென்று புதுமொழி கண்டவர்கள். சாதி செய்து சாதித்தவர்கள். தீண்டாமையை தோற்றுவித்தவர்கள். வேதம் இயற்றி வேற்றுமை உண்டாக்கியவர்கள். சொன்னால் சொல்லிமாளாது.
இவ்வளவு பாரம்பரியமிக்க ஒரு சாதித்(த) தலைவரை கைது செய்தவுடன், குய்யோ முய்யோ என்று கதறுகிறார்கள். பாமர மக்களின் மெளன மொழிக்கு, வேறு அர்த்தம் காண்பிக்க முயல்கிறார்கள்.
இங்கே என் மனதில் உள்ள கேள்விகளை வைக்கிறேன்.
1) தலித்களுடன் தீண்டாமை பாராட்டாது பழகுகிறார் என்று சொல்லும் நண்பர்களே, "வர்ணாசிரமத்தை நான் ஏற்கவில்லை" என்று செயேந்திரர் அறிவிப்பாரா?
2) காஞ்சி மடத்தின் முக்கிய பொறுப்பில் பிராமணரல்லாத யாரையாவது நியமிப்பாரா?
3) எம்மொழியில் பூசை செய்தாலும் இறைவன் ஏற்றுக் கொள்வான் என்று அறிவிக்கத் தயாரா?
இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள் என் மனதில் உள்ளது. ஒவ்வொன்றாய் வரும்.