.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Wednesday, December 29, 2004

எரிகிற வீட்டில் பிடுங்கும் நாய்கள்.

தினமலரில் இந்த செய்தியை படித்தேன். அவர்களுடைய ஆருடம் பலித்து விட்டதாம். சந்தோசப்படுகிறார்கள். அரசியல்வாதிகளைவிட கீழ்த்தரமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்.


Monday, December 20, 2004

மிலே சுர் மேரா புதிய வடிவில்

மிலே சுர் மேரா துமாரா - இப்படி ஒரு தேச பக்தி பாடலை என் சிறுவயதில் அடிக்கடி அரசு தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். இந்திய மக்களின் பல தரப்பட்ட மொழிகளையும், கலாசாரத்தையும் விளக்கும் பாடலாக அமைந்திருந்தது அது. இப்போது MIT மாணவர்கள் அதே பாடலை புதியவடிவில் படமாக்கியுள்ளார்கள். வித்தியாசமான முயற்சி.
பார்க்கவிரும்புபவர்கள் இங்கிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Saturday, December 11, 2004

உலகின் புதிய 7 அதிசயங்களும், அதன் நம்பகத்தன்மையும்

உலக அதிசயங்கள் யாவை? இந்தக் கேள்வியைக் கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு பதிலை கொடுப்பார்கள். முதன்முதலில் உலகின் 7 அதிசயங்களைத் தொகுத்தவர்கள் பழங்கால கிரேக்கர்களே. அதுவும் அவர்கள் மத்தியதரைக்கடல் (Mediterrenian world -சரிதானா?) பகுதியை மட்டுமே கணக்கில் கொண்டார்கள். அவர்கள் கூறிய அதிசயங்களின் பட்டியல் இங்கே. அதன்பிறகு ஒவ்வொருவரும் பட்டியலிலிருந்து சிலவற்றை நீக்கியும், சேர்த்துக்கொண்டும் புதிய அதிசயங்களை அறிவித்தார்கள்.

ஐ.நா. வின் UNESCO அமைப்பு, உலகின் பாரம்பரியமிக்க இடங்களையும், கட்டிடங்களையும் அறிவிக்கிறது. அந்தப் பட்டியல் இங்கே. இது இன்னும் பல சேவைகளையும் செய்து வருகிறது. ஆனால் உலக அதிசயங்களாக இது எதையும் அறிவிக்கவில்லை.

தற்போது இணைய வாக்கெடுப்பின் மூலம் புதிய அதிசயங்களை தேர்ந்தெடுக்க new 7 wonders என்ற நிறுவனம் முயற்சி எடுத்துள்ளது. இது இந்தியாவில் இருந்து தாஜ்மகாலையும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலையும் பரிந்துரை செய்துள்ளது. இதனால் இவை இரண்டும் தான் இந்தியாவின் மிகப் பாரம்பரியமிக்க அதிசயங்கள் என எண்ண வேண்டாம். இந்தப் பட்டியலில் நீங்கள் விரும்பும் அதிசயத்தை சேர்ப்பது மிக எளிது. குறைந்தது ஏழு பேர் ஒரு இடத்தை பரிந்துரை செய்தாலே போதுமானது என்று அவர்களே தங்களுடைய வலையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இவ்வாறான வாக்கெடுப்பினால் உலகின் புதிய 7 அதிசயங்களை இனம் காண முடியுமா? என்பது சந்தேகத்திற்குறியவையே. தமிழ் மக்கள் அனைவரும் கண்டிப்பாக மீனாட்சியம்மன் கோயிலிற்குத்தான் வாக்களித்திருப்பார்கள், மற்ற அதிசயங்களின் பாரம்பரியங்களை உணராமலே. இதைப்போன்றது தான் ஒவ்வொரு நாட்டவரின் கதியும். நடுநிலையாக வாக்களிப்பவர்கள் மிகச்சிலரே.

இந்த வாக்கெடு்ப்பின் மூலம் அறிய முடிவது ஒன்றே. யார் தன் இன, மொழி மற்றும் பிற மீது அதிக பற்றுள்ளவர்கள்? இதை இன்று தமிழர்கள் மத்தியில் கண்கூடாக பார்க்கலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்கு வாக்குகேட்டு பத்திரிக்கைகளும், குறுஞ்செய்திகளும், இ-குழு மடல்களும் உலாவுகின்றன.

இதே போன்ற நிலைதான் சென்ற ஆண்டு, BBC உலகின் சிறந்த பத்து பாடல்களை வரிசைப்படுத்த ஒரு இணைய வாக்கெடுப்பு நடத்தியது. இளையராஜாவின் "ராக்கம்மா கைய தட்டு" பாடலுக்கு வாக்களிக்க சொல்லி எனக்கு ஒரு மடல் வந்தது. அதன் சாராம்சம் இது தான். வங்காளிகளும், மற்ற இந்தியர்களும் வந்தேமாதரம் பாடலுக்கு வாக்களித்துக் கொண்டு இருக்கிறார்கள், எனவே ராக்கம்மாவுக்கு வாக்களிக்கச்சொல்கிறது கடிதம். இதைப்பார்த்த
பாகிஸ்தானியர்கள் "தில் தில் பாகிஸ்தான்" பாடலுக்கு வாக்கு சேர்க்க, ஈழத்தமிழர்கள் தங்களுடைய ஈழப்பாடலுக்கு வாக்கு சேர்க்க என பெரிய தேர்தலே நடந்தேறியது. அப்போட்டி முடிவுகள் இங்கே. பத்தில் ஆறு பாடல்கள் இந்திய துணைக்கண்டத்திலிருந்து தான்.

சரி. new 7 wonders என்ன தான் செய்ய நினைக்கிறது. இந்த வாக்கெடுப்பு மட்டுமல்லாது அவர்கள் பல வழியில் பணம் சேர்க்கிறார்கள். சேர்த்த பணத்தை வைத்து ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளினால் அழிக்கப்பட்ட பாமியான் புத்த சிலைகளை புணரமைக்க திட்டமாம். இவையெல்லாம் உண்மைதானா? இந்த சுட்டியை பார்ககும்போது ஏதோ உண்மை இருப்பது போலத்தான் தோன்றுகிறது.

இவையெல்லாம் நடக்கிறதா என்று பார்க்க ஜனவரி1, 2006 வரை காத்திருக்கவேண்டும். அன்று தான் தேர்தல் முடிவு.


Sunday, December 05, 2004

விளாடிமிர் புடின், கேஜிபி, டிரெஸ்டன்

புடின் 1952-ல் லெனின்கிராடில் (இப்போது செயின்ட் பீட்டர்ஸ்புர்க்) பிறந்தார். 1970-ல் லெனின்கிராட் பல்கலைகழகத்தின் சட்டத்துறையில் நுழைந்தபோது, சோவியத் கூட்டமைப்பில் சட்டத்துக்கு இடமே இல்லை. சட்டத்துறையானது, கேஜிபி (KGB-சோவியத் உளவுப் பிரிவு), போலீஸ் மற்றும் அரசுப் பணிக்கு ஆட்களைத் தயார் செய்யும் களமாகவே இருந்து வந்தது. 1975-ல் பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்னாகவே புடினை கேஜிபி தன் பக்கம் இழுத்தது. புடினும் கேஜிபி-யில் சேருவதையே தன் குறிக்கோளாக கொண்டிருந்தார். தாய்நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டு இருந்ததால், கேஜிபி-யில் சேர்ந்து தன் சமுதாயத்திற்கு சேவை ஆற்ற நினைத்தார்.

சில காலம், லெனின்கிராடில் வெளிநாட்டவர்களை உளவு பார்த்தார். 1980 களின் ஆரம்பத்தில் மாஸ்கோவிலுள்ள, Elite Foreign Intelligence Training Institute அவருக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து அப்போதைய கிழக்கு ஜெர்மனியில் பணியமர்த்தப்பட்டார். தன்னுடைய 32-வது வயதில் டிரெஸ்டன் (கிழக்கு ஜெர்மனியில் ஒரு நகரம்) வந்து சேர்ந்தார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னால், கிழக்கு ஜெர்மனி சோவியத் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது, கிட்டத்தட்ட 4,00,000 சோவியத் படைகளும், பல மத்திய துார ஏவுகணைகளும் இங்கு நிலைகொண்டு இருந்தது. பெர்லின் பனிப்போரின் சாட்சியாக காட்சியளித்தது.

இந்நேரத்தில் ஆயிரக்கணக்கான கேஜிபி அதிகாரிகள் கார்ல்ஸ்கோர்ஸ்டில் (பெர்லின்) உள்ள தங்கள் தலைமையகத்துக்கு செய்தி அனுப்பியவாறு இருந்தார்கள். சோவியத் இராணுவ உளவுப்பிரிவு கிழக்கு ஜெர்மனியில் இருந்தாலும், அதைவிட மிகப் பெரிய உளவு நிறுவனமாக திகழ்ந்தது தான் கிழக்கு ஜெர்மனியின் இரகசிய போலீசான ஸ்டாசி (Stassi). உண்மையில் இவர்கள் தான் கிழக்கு ஜெர்மனி மக்களையும், போராட்டக்காரர்களையும் தீவிரமாக உளவு செய்தவர்கள்.

இவர்களை கேஜிபி அமைப்பினர் தங்கள் தேவைக்கேற்ப உபயோகப்படுத்திக்கொண்டார்கள். ஸ்டாசியைச் சேர்ந்தவர்கள் கேஜிபியினரை "நண்பர்கள்" (The friends) என்றே அழைப்பர்.

ஸ்டாசி என்னென்ன வேலைகளை கேஜிபிக்காக செய்தது என்பது பற்றியும், புடின் இங்கே என்ன செய்தார் என்பது பற்றியும் அடுத்து வரும் பதிவில் மேலும் விவரமாக எழுதுகிறேன்.